காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை சத்துணவு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்
கோவை, ஏப். 26 – சத்துணவுத் திட்டத்தில் பணிபுரி யும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தின் மாவட்ட மாநாடு வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தொகுப்பூதியம் ஒழிப்பு மற்றும் 16 ஆவது மாவட்ட மாநாடு, கோவை யில் உள்ள தாமஸ் கிளப்பில் தோழர் பி.பேயதேவன் நினைவரங் கில் சனியன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என். பானு லதா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பி.முருகன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் பி. செந்தில்குமார் தொடக்க உரை யாற்றினார். மாநாட்டு அறிக் கையை மாவட்டச் செயலாளர் ஏ. லதா, பொருளாளர் பி. சுதா முன் வைத்தனர். இதில், சத்துணவுத் திட்ட ஊழி யர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் ரூ.9,000 ஆக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவி யாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். சமை யலர் காலிப் பணியிடங்கள் ஏற் படும்போது, உதவியாளர்களின் பணி மூப்புப் பட்டியலின் அடிப் படையில் சமையலர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். தமிழக அர சின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு தமிழக அரசே நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன், தலைவர் எஸ். மதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்க மாநிலச் செயலாளர் ஜே. நிர்மலா, மாநிலப் பொருளாளர் எம். ஆர்.திலகவதி நிறைவுரையாற்றி னர். மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக என்.பானுலதா, மாவட்டச் செய லாளராக ஏ.லதா, மாவட்டப் பொரு ளாளராக பி.சுதா உள்ளிட்ட 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடி வில் மாவட்ட துணைத் தலைவர் கே.மருதன் நன்றி கூறினார். மாநாட்டில் திரளான சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் பங்கேற்றனர். ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 16 ஆவது மாநாடு ஈரோடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் யு.பழ னிசாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.சங் கீதா வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ் தொடக்க உரையாற்றி னார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.தமிழரசன் சிறப்புரை யாற்றினார். மாநில பொதுச் செய லாளர் அ.மலர்விழி நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக ஆர்.தமிழ்செல்வி, பொதுச் செயலாளராக எம்.கண் ணன், பொருளாளராக கே.பாப் பாத்தி, துணைத் தலைவர்களாக யு. பழனிசாமி, பி.விஜயன், கே.இந்தி ராணி, இணைச் செயலாளர்களாக எம்.ராஜேஸ்வரி, பழனியம்மாள், வி.சங்கீதா மற்றும் மாநில செயற் குழு உறுப்பினராக வி.லோக நாயகி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். முடிவில், எம்.செல்வி நன்றி கூறினார்.