tamilnadu

img

கோவை அருகே ரயில் மோதி யானை உயிரிழப்பு

கோவை அருகே ரயில் மோதி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 கோட்டைக்காடு- வாளையாருக்கு இடையே நேற்று நள்ளிரவு உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை  ஒன்று அங்குள்ள தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் யானை மீது மோதியது. இந்த விபத்தில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.  
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூறுகையில், இந்த பகுதியில் ரயில் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது. நேற்று நள்ளிரவு ஆண் யானை ஒன்று தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ளது. இறந்த ஆண் யானைக்கு 20 வயதாகிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர். . 
 

;