சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்களைக் கடந்த வந்த நபரை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவையிலிருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கும் ஸ்கூட் விமான இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளைக் கண்காணித்தனர்.
அதில் சந்தேகத்திடமாக வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் நிறுத்திச் சோதனையிட்ட போது அவரது பையில் கார்ன் பிளாக் பாக்கெட்டுகள் இருந்தது. அதனை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது அதில் 2 கிலோ எடை கொண்ட பச்சை நிறத்திலான கஞ்சா அல்லது மரிஜுவனா வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 1 கோடியாகும். இதையடுத்து அந்த பயணியைக் கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.