tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பிளவுவாத அரசியலுக்காக முருக பக்தர்கள் மாநாடு அ.சவுந்தரராசன் பேச்சு

தென்காசி, ஜூன் 22- மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் மதம் சார்ந்த வெறுப்பு அரசியலை கண்டித்தும் தமி ழக அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் மக்கள் சந்திப்பு கிளர்ச்சிப் பிரச்சா ரம் நடைபெற்றது.  தென்காசி மாவட்டம், கடையநல்லூ ரில் நடைபெற்ற பிரச்சார இயக்க நிறை வுப் பொதுக்கூட்டத்திற்கு தென்காசி வட் டாரச் செயலாளர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மூத்த  தலைவர் அ.சவுந்தரராசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் கடவுளை  வைத்து அரசியல் செய்யும் மோசமான நடவடிக்கைகளை பாஜக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இன்று தமிழ் நாட்டில் முருக பக்தர்கள் மாநாடு என்ற  ஒரு பிளவுவாத அரசியலை கையில் எடுத்திருக்கிறது. இதேபோல் அயோத்தி யில் ராமர், காசியில் பூரி ஜெகநாதர் என  மக்களை கருத்தியல் ரீதியாக ஓன்று திரட்ட முடியாமல், கடவுளின் பெயரால் அரசியல் செய்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசு, நீதிமன்றங் களையும் தனது கையில் வைத்துக் கொண்டு ஆளும் வர்க்கத்திற்கு சாதக மாக தீர்ப்பு கொடுக்கும் ஒவ்வொரு நீதி பதிக்கும் சன்மானமாக பணமும், பதவி யும், கொடுத்து அரசியலமைப்பையே சிதைத்துக் கொண்டிருக்கின்றது.  பாஜக  அரசாங்கத்தின் இந்த போக்கு இந்திய  மக்களை நசுக்கிவிடும். இந்த போக்கை  அகற்ற வேண்டுமானால் அனைத்து மக் களும் இடதுசாரிகளின் பின்னால் அணி திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அத்துமீறும் சுற்றுலாப் பயணிகளுக்கு  விழிப்புணர்வு

உதகை, ஜூன் 22- ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலாப் பயணிகளி டையே, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேர ளம், கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து  நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப்  பயணிகளின் வருகை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. கூடலூர் - மைசூரு சாலையில் அமைந்துள்ள தலைகுந்தா பகு தியில் சதுப்பு நிலம் ஒன்று உள்ளது. அங்கு சுற்றுலாப் பயணி கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விழிப்புணர்வு பலகை  வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஞாயிறன்று சிலர் அதனை  கருத்தில் கொள்ளாமல் சதுப்பு நிலத்துக்குள் சென்று  புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். இதனைக் கண்ட வனத் துறையினர் சுற்றுலாப் பயணிகளை வெளியேற வைத்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

மத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை செல்வப் பெருந்தகை பேட்டி

கோவை, ஜூன் 22- பாஜகவின் மத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை, என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரி வித்தார். கோவை விமான நிலையத்தில் ஞாயிறன்று செய்தி யாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, பாஜக வின் வேஷம் சிலரை ஏமாற்றலாம், ஆனால் தமிழ்க்கடவுள் முருகனை ஏமாற்ற முடியாது. 2026 தேர்தலில் பாஜகவை முரு கன் சூரசம்ஹாரம் செய்வார். இந்தியா கூட்டணி வலிமை யாக உள்ளது. பாஜகவும், அதிமுகவும் பகல் கனவு காண் கின்றன. முருகர் மாநாடு குறித்த கேள்விக்கு, “பாசிச சக்திகளு டன் இணைபவர்களை தமிழ் மக்களும், முருகனும் புறக் கணிப்பார். அயோத்தியில் ராமர் பாஜகவை கைவிட்டார்.  ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்கிலம் பேசுவது இவர்களுக்கு  பிடிக்கவில்லை. இபிஎஸ்-யை ஆங்கிலத்தில் அழைக்கும்  அமித்ஷா, அவரை அவமானப்படுத்துகிறாரா? தமிழக  மக்களின் ஆதரவுடன் இந்தியா கூட்டணி 2026 சட்டமன்ற  தேர்தலில் வெற்றி பெறும். பாஜக-வின் மத அரசியலுக்கு தமி ழகத்தில் இடமில்லை, என்றார்.