tamilnadu

img

தார்ச்சாலை அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தார்ச்சாலை அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுக்கொட்டாய் முதல் வாரக்கொள்ளை வழியாக மலை யூர் வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், பிக்கிலி ஊராட்சி,  மேட்டுக்கொட்டாய் முதல் வாரக் கொள்ளை வழியாக மலையூர் வரை உள்ள சாலையை, பள்ளி  குழந்தைகள், கல்லூரி மாணவர் கள், தொழிலாளர்கள், விவசாயி கள் என பல்வேறு தரப்பினர் பயன் படுத்தி வருகின்றனர். மக்கள் அதி களவில் பயன்படுத்தும் இந்த சாலை பெரிய அளவில் பறாங்கற் களும், குழிகள், செங்குத்தான இடங்கள். ஒரு பக்கம் பாதுகாப்பு  இல்லாத பள்ளம் உள்ளது. மேலும், ஜம்பள்ளம், கோட்டங் கள் என்ற இடங்களில் உள்ள பெரிய பாறைகள் மக்கள் மீது  சரிந்து விடும் அபாயம் உள்ள தால், மக்கள் பயன்படுத்துவ தற்கே தகுதியற்ற சாலையாக உள்ளது. திருமணம், திரு விழாக்கள் மற்றும் அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவர் கள், இருசக்கரம், கனரக வாக னங்களை மக்கள் பயன்படுத்து கிறார்கள். பயன்படுத்த தகுதி யற்ற சாலையில் செல்லும் வாக னங்கள் விபத்தில் சிக்கும் அபா யம் உள்ளது. இந்த சாலையை தார்ச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,  பல ஆண்டுகள் கோரிக்கை கள் வைத்தும், மாவட்ட ஆட்சி யர், வட்டார வளர்ச்சி அலுவலர்  ஆகிய அதிகாரிகளிடம் மனு  அளித்தும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எனவே,  பொதுமக்களின் நலன்கருதி இச் சாலையை மேம்படுத்த வேண் டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.சின்னராஜி தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.வே.விசுவநாதன், பகுதிக்குழு செய லாளர் சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் இரா.சின்னசாமி, பகுதிக்குழு உறுப்பினர்கள் டி. ஆர்.சின்னசாமி, சி.அன்பரசு, சண் முகம் உட்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.சுருளிநாதனிடம் மனு அளிக்கப்பட்டது.