கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த லாரி
நாமக்கல், மார்ச் 31- திருச்செங்கோடு அருகே காகித ஆலைக்கு சவுக்கு மர பாரம் ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக் குள் புகுந்து விபத்துக்குள்ளானது. கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரோடு மாவட் டத்திலுள்ள காகித ஆலைக்கு சவுக்கு மர பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகர் (37) என்பவர் லாரியை இயக்கியுள்ளார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, எட்டிமடை புதூர் அருகே ஞாயிறன்று வந்து கொண்டி ருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையிலுள்ள உணவக விடு தியின் சுவரில் மோதி நின்றது. அப்போது கடைக்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகலறிந்த திருச்செங்கோடு நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து, வழக்குப்பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.