கோவையில் ஜே.பி நட்டா வருவதாக கூறி கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள துணிக்கடை மற்றும் புத்தககடைகளை மூடிய அவலம் நிகழ்ந்துள்ளது.
பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று கோவை வந்தார். காலையில் அவர் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவர் கோவை வருகையில் தாமதம் ஏற்பட்டதால் ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வந்து ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்தனர்.
முன்னதாக நட்டா கோயில் வருகையை யொட்டி கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள துணிக்கடைகள் மற்றும் புத்தககடைகளை பாதுகாப்பு காரணங்களை காட்டி காவல்துறையினர் நிர்பந்த படுத்தி மூட செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பாஜக தலைவர் கோயிலுக்கு வந்தாலே கடையை பூட்டச்சொல்கிறார்களே அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமோ என்று புலம்பி வருகின்றனர்.