tamilnadu

img

குடும்பஸ்தன் படக்குழுவினருக்கு பாராட்டு விழா

குடும்பஸ்தன் படக்குழுவினருக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் மற்றும் நவீன மனிதர்கள் அமைப்பு இணைந்து குடும்பஸ்தன் திரைப் படக் குழுவினருக்குப் பாராட்டு விழா நடத்தி னர். திருப்பூர், காந்திநகர் ஜீவா காலனி கூட்டு றவு மண்டபத்தில் ஞாயிறன்று மாலை இந்நி கழ்ச்சி நடைபெற்றது. இதில் தமுஎகச திருப் பூர் மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் தலைமை ஏற்றார். தமுஎகச வடக்கு செயலா ளர் த.காளிதாஸ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் நோக்கவுரை ஆற்றினார். யுவராஜ்  சம்பத் வாழ்த்திப் பேசினார். இந்த விழாவில் மாநகர மேயர் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டு பரிசளித்துப் பாராட்டினார்.  குடும்பஸ்தன் திரைப்படக் குழுவின ரான நக்கலைட்ஸ் பிரசன்னா, இயக்குநர் ராஜேஷ் மற்றும் நடிகர் ஜென்சன் திவாகர்  உள்ளிட்டோருக்கு பாராட்டி விருது வழங் கப்பட்டது. முன்னதாக நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், நூல் அறிமுக உரையாற்றினார். சுவாமி தர்ம தீர்த்த அடிகளார் எழுதிய இந்து கொடுங் கோன்மையின் வரலாறு என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். குடும் பஸ்தன் படக்குழுவினர் சார்பில் நக்க லைட்ஸ் பிரசன்னா ஏற்புரை ஆற்றினார். நிகழ் வில் பங்கேற்ற பார்வையாளர்கள் கேள்விக ளுக்கு இயக்குநர் ராஜேஷ் பதிலளித்தார். நிகழ்ச்சியை கவிஞர் பா.ராஜேஷ் தொகுத்து வழங்கினார். திறந்தவெளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள், இளை ஞர்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து  கொண்டனர். நிறைவாக நவீன மனிதர்கள் அமைப்புச் செயலாளர் அருண்குமார் நன்றி  கூறினார்.