பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் 2வது மதகு உடைந்து. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பரம்பிக்குளம் அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்த நிலையில், அணையின் 2வது மதகு, இன்று அதிகாலை 2 மணி அளவில் உடைந்தது. இதனால் வினாடிக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், ”உடைந்த மதகை சரி செய்ய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என்றும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பு மதகு சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.