tamilnadu

img

உலகப் போருக்கு வழிவகுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா

உலகப் போருக்கு வழிவகுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா

இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்


சேலம், ஜூன் 20- மீண்டும் ஒரு உலகப் போருக்கு வழிவகுக் கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நடவ டிக்கைகளைக் கண்டித்து, இடதுசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது, 20  மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் இடை விடாத குண்டு வீச்சு மற்றும் ராணுவ ஆக்கி ரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகி றது. இதன் காரணமாக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பா லானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளா கும். இந்தியா வரலாற்று ரீதியாக பாலஸ்தீன கோரிக்கையை ஆதரித்து வந்திருந்த நிலை யில், தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை திருப்திப் படுத்தும் நிலைப்பாட்டை மேற்கொண்டு வரு கிறது. இதன்தொடர்ச்சியாக, இஸ்ரேல் ஈரான் மக்களை தாக்கி வருகிறது. உலகப் போருக்கு வழிவகுக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க  ஏகாதிபத்திய நடவடிக்கையை கண்டித்தும், தேசம், கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்கான நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இடதுசா ரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளி யன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார்,  சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டச் செயலா ளர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமை  வகித்தனர். இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் எ.முருகேசன், சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் எம். ராமன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலக் குழு உறுப்பினர் வி.அய்யந்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.