கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் பச்சிளம் குழந்தை, மற்றும் ஓட்டுநர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் வந்த ஆம்புலன்ஸ் கோவை மலுமிச்சம்பட்டி அருகே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தை மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.