விஷவாயு தாக்கி மூவர் இறந்த சம்பவத்தில் தொழிலக ஆய்வு துறையினரிடம், விசாரித்து நடவடிக்கை
திருப்பூர், மே 26 - திருப்பூர் அருகே சாய ஆலை யில் கழிவுநீர் தொட்டியை சுத் திகரிக்கச் சென்ற மூவர் விஷ வாயுத் தாக்கி உயிரிழந்த சம் பவத்தில், தொழிலக ஆய்வு துறையினரிடம் விளக்கம் கேட்கப் படும் என்று தமிழ்நாடு ஆதி திரா விடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவர் நீதிபதி தமிழ் வாணன் கூறினார். திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னகரை பகுதியில் தனியார் சாய ஆலை யில், கடந்த 19ஆம் தேதி கழிவு நீர் தொட்டியை சுத்திகரிக்கச் சென்ற மூன்று பேர் விஷ வாயுத் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கள ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் ஆணைய தலைவர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி முனைவர் தமிழ்வாணன் தலைமையில் அந்த ஆணைய உறுப்பினர்கள் செல்வக் குமார், ஆனந்தராஜா, மு.பொன் தோஸ் மற்றும் ரேகா பிரியதர் ஷினி ஆகியோர் திங்களன்று திருப் பூருக்கு வருகை தந்தனர். அவர்களுடன் மாநில தூய் மைப் பணியாளர்கள் நல வாரிய முதன்மை அலுவலர் கோவிந்த ராஜ், மாநில தூய்மைப் பணியா ளர் நல வாரிய துணைத் தலைவர் கனிமொழி ஆகியோரும் வந்தி ருந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்க ளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ் துராஜ், மாநகராட்சி ஆணையர் ராம மூர்த்தி, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணைய தலை வர் தமிழ்வாணன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறுகையில், உயிரி ழந்த மூவரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ.6 லட்சம் வீதம் வழங்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகு திகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற் றும் பழங்குடியினர் மீது நடத்தப்ப டும் ஒடுக்குமுறை சம்பவங்களில் நாங்கள் நேரில் கள ஆய்வு செய் திருக்கிறோம். திருப்பூர் விஷ வாயு தாக்குதலில் மூவர் உயிரி ழந்த சம்பவத்தை ஊடகங்களில் செய்தியாக வந்ததை கவனித்து தற்போது இங்கு ஆய்வு செய்கி றோம். இந்த சம்பவத்தில் இழப்பீடு தரு வது என்பது உயிரிழப்புக்கு ஈடா காது. எனினும் அது சிறு ஆறு தலை தரும். சிலரது கவனக் குறை வான நடவடிக்கையால் இந்த சம்ப வம் நடைபெற்று உள்ளது. திருப்பூ ரில் அதிக அளவில் சாய ஆலை கள் இருக்கும் நிலையில் கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்க முறை யான உபகரணங்களை பயன்ப டுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை பின் பற்றாமல் இருப்பது குறித்து, தொழி லக ஆய்வு துறையினர் கண்கா ணித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு கண்காணித்து நடவ டிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும். அவர்களது நட வடிக்கை சரியில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைப்போம். சாய ஆலை கழிவுநீர் தொட்டி யில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த இந்த வழக்கில் அந்த சாய ஆலை உரிமையாளர் தலை மறைவாக இருக்கிறார். அவரை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம், மாநகர காவல் ஆணையரிடம் கேட்டிருக்கிறேன். விரைவில் அவர் கைது செய்யப்படுவார். இவ்வாறு தமிழ்வாணன் கூறினார்.