ஒரு நாட்டின் கல்வித்தரத்தை குறைத்தால் தானாக எல்லாம் அழிந்துவிடும் சிக்கண்ணா கல்லூரியில் முனைவர் பொ.குழந்தைவேல் பட்டமளிப்பு பேச்சு
ஒரு நாட்டை அழிப்பதற்கு அணு குண்டும், ஏவுகணையும் தேவை யில்லை. அந்த நாட்டின் கல்வித்த ரத்தைக் குறைத்தால் தானாக எல்லாம் அழிந்துவிடும் என்று தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா சொன் னதை சுட்டிக்காட்டி, ஒரு சிறந்த சமுதா யத்தை உருவாக்க கல்வி முறை சிறந்த தாக இருக்க வேண்டும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொ. குழந்தைவேல் பட்டமளிப்பு விழா உரை யில் கூறினார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 52ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் 2022 - 2023 ஆம் ஆண்டு கல்லூரியில் பல்வேறு பிரிவு களின் கீழ் இளநிலை மற்றும் முது நிலை கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிக் கப்பட்டது. கல்லூரி முதல்வர் வ.கிருஷ் ணன் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்வில், சேலம் பெரியார் பல்கலைக்க ழக முன்னாள் துணைவேந்தர் பொ. குழந்தைவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றிய குழந்தைவேல் மாண வர்கள் மத்தியில் கூறுகையில், கடந்த 2000 வருடங்களாக வெவ்வேறு நிலைகளில் கல்வி வளர்ச்சியுற்று கற்பிக்கப்பட்ட போது, மதமும் சேர்ந்து போதிக்கப் பட்டது. மெல்ல மெல்ல அதுவும் கடந்து அறிவியல், தத்துவமும், மொழி, வர லாறு என பல்வேறு துறைகளில் கற்றல் விரிவடைந்தது. கடந்த 200 வருடங்க ளாக கல்லூரி, பல்கலைக்கழகம் என அமைந்து கற்றல் முறை மேம்பாடு பெற்றது. கடந்த 50 ஆண்டு காலமாக என்றும் கண்டிராத தொழில்நுட்ப வளர்ச்சி, அதுவும் கணினியில், தொலைத்தொடர்புத்துறையில் கற் பனை செய்யமுடியாத அளவில் வளர்ச்சி பெற்று உலக நாடுகள் எல்லாம் நமது உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. விஞ்ஞான கண்டுபிடிப்பினால் ஏற்ப டும் மாற்றத்தால் நன்மைகளும், தீமைக ளும் இருந்து கொண்டேதான் இருக்கின் றன. நாம்தான் அதை நம்முடைய வாழ்க்கை முறைக்கும், தேவைக்கும் ஏற்ப மாற்ற வேண்டும். அப்போதுதான் அறிவியலும், தொழில்நுட்பமும் ஒருங் கிணைந்து செயல்படும். நமக்கு வேண் டிய தரவுகள் அனைத்தையும் இணை யத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள லாம். சில நேரங்களில் அந்த தகவல்க ளால் பலதரப்பட்ட குற்ற நிகழ்வுகளும் நடந்து விடுகின்றன. அதை ஆக்கப்பூர் வமாக பயண்படுத்தினால் சமூக மாற் றத்திற்கு உறுதுணையாக இருக்கும். ஒரு நாட்டை அழிப்பதற்கு அணு குண்டும், ஏவுகணையும் தேவை யில்லை. அந்த நாட்டின் கல்வித்த ரத்தைக் குறைத்தால் தானாக எல்லாம் அழிந்துவிடும் என்று தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா கூறி னார். ஒரு சிறந்த சமுதாயத்தை உரு வாக்க கல்வி முறை சிறந்ததாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் முன்னேற்றத் திற்கு இன்று பட்டம் பெறுபவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று கூறி னார். இதைதொடர்ந்து இளங்கலை பிரிவில் 606 மாணவ மாணவியர், முது கலை பிரிவில் 185 மாணவ, மாண வியர் என 791 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பெற்றோருக்கு அனுமதி மறுப்பு: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி உள் வளாகத்தில் நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவில், இடப் பற்றாக்குறை காரணமாக பட்டம் பெறுபவர்கள் மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்கள் மகன், மகள் பட்டம் பெறுவதை காண வேண்டும் என கல்லூ ரிக்கு வருகை தந்திருந்த பெற்றோர்கள் ஆவலோடு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்கு வெளியே காத்தி ருந்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர்கள் நிகழ்ச்சி அரங்கிற் குள் அனுமதிக்கப்படவில்லை. இத னால் கல்லூரி நிர்வாகத்தினருடன் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் கல்லூரி விதிமுறைகள் மற்றும் இட நெருக்கடியை காரணமாக கூறி அவர்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெற்றோர்கள் வேதனையுடன் வெளி யில் காத்திருந்தனர். இதற்கு மாற்று ஏற்பாடாக நிகழ்ச்சி அரங்கிற்கு வெளியே எல்.இ.டிதிரை அமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டிருந் தால் கூட தங்கள் மகன், மகள் பட்டம் பெறுவதை கண்டு மகிழ்ச்சியடைந்தி ருப்போம் என தெரிவித்தனர்.