சிறு கடை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கிடுக
நகராட்சி அலுவலகத்தில் சிபிஎம் மனு
தருமபுரி, ஏப்.23- தருமபுரி பேருந்து நிலையத்தில் சிறு கடை வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும், என வலியுறுத்தி நக ராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். தருமபுரி நகராட்சிக்குபட்ட பகுதி யில் இராஜகோபால் பேருந்து நிலையம் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்தின் உட்பகு தியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், சிறுபழக்கடைகள் வைத்து விற்று வந்தனர். இதனை அங்கீகரிக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. மேலும், தெருவோரக்கடை சிறு வியபாரிகள் என தருமபுரி நகராட்சி நிர்வாகம் அடை யாள அட்டை வழங்கியது. இந்நிலை யில், கடந்த ஒரு மாத காலமாக பேருந்து நிலையத்தினுள் சிறுகடை வைக்க அனு மதிக்கவில்லை. இதனால், சொற்ப வரு மானத்தில் குடும்பம் நடத்தி வந்தவர் கள், தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மீண்டும் அதே இடத்தில் சிறுகடை வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும், என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் புதனன்று நகராட்சி அலுவலகத் தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில், கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.ஜோதி பாசு, நகரக்குழு உறுப்பினர்கள் ஒய்.சுபா, எஸ்.நிர்மலா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.