tamilnadu

img

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

கோவை, ஜூன் 26- கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும்  கன மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த மே 30  ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாப்  பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை தொடரும் நிலையில், கோவை  மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு  அலர்ட் அறிவித்துள்ளது. எனவே, வெள்ளப்பெருக்கு  நிலை சீராகும் வரை சுற்றுலா அனுமதி வழங்கப்படாது.  நிலைமை மதிப்பீடு செய்த பிறகு, வனத்துறை அதிகாரிகளின்  உத்தரவுப்படி சுற்றுலா அனுமதி மீண்டும் வழங்கப்படும் என்று  போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அறிவித்துள் ளார்.