கோவை:
சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோதும் தற்போது கொரோனா பெரும் தொற்றுகாலத்திலும் உயிரைப்பண யம் வைத்து முன்களப்பணி யாளர்களாக பணியாற்றிய சென்னை மாநகராட்சி தற்காலிக தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்குதல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் NULM தொழிலாளர்கள் தூய்மை பணில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.624.50 வழங்கிட 16.10.2017-இல்அரசாணை வெளியிடப்பட்டது. (அரசாணை எண் : 62/20). இவர்கள் சென்னையில் பெரும்வெள்ளம் ஏற்பட்டபோதும், வர்தா புயல் தாக்கிய போதும், தற்போது கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது தங்கள் உயிரை பணயம் வைத்து முன்கள பணியாளர்களாக பணிசெய்து மக்களை காப்பாற்றியதோடு, தங்களது அரசுக்கும் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
அரசு அறிவித்த ஊதியம் கேட்டுமூன்றாண்டுகளாக மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் ஊதிய உயர்வு வழங்காத காரணத்தினால் கடந்த 7.9.2020 அன்று கூட்டு முறையீடு செய்வதற்கான இயக்கம் நடத்தியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் 200க்கும் அதிகமான தூய்மை பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டது.இதனால் தொழிலாளர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி யுள்ளார்கள். அவர்களது குடும்பங்கள் துன்பத்திற்கு ஆளாகி யுள்ளது.எனவே NULM தொழி லாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு2009 ஆம் ஆண்டு அரசாணை எண்256 மூலம் சென்னை மாநகராட்சியோடு நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்த பெருநகர சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
மேற்படி உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் (NMR) பணி தொடர்ச்சியுடன் பெருநகர சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு பகுதியினர் குடிநீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் ஆகியவற்றிற்கு மாற்றம் செய்யப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவு பெற்று30 பேர் பணி நிரந்தரப்படுத்தப் பட்டுள்ளனர். மீதமுள்ள மாநக ராட்சி NMR தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்திட வேண்டும்.தற்போது மாநகராட்சியின் 11 மண்டலங்களில் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக தகவல் வருகிறது. அப்படி தனியாரிடம் கொடுக்கப்பட்டால் தற்போது பல ஆண்டுகள் பணிசெய்த NULM தொழிலாளர்கள் பணி இழக்க நேரிடும். ஆகவே அவர்களுக்கு பணி தொடர்ச்சி கிடைத்திட வேண்டும்.
மேற்படி கோரிக்கையினை சென்னை மாநகராட்சி ஊழியர் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன் அவர்கள், 17.9.2020தேதியிட்ட கடிதம் மூலம் தங்களுக்கு மனு அளித்திருந்தார்என்பதையும் நினைவுபடுத்து கிறேன். தொழிலாளர்கள் நலன் கருதி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.