tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தனியார் நிறுவன மின் பாதை அமைப்பதை தடுத்த விவசாயிகள் கைது

திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறைக்குப் புறம் பாக பனை மரங்களை வெட்டியும், இடைவெளி விடா மலும் தனியார் நிறுவனம் மின் பாதை அமைத்ததாகக் கூறி  தடுத்த விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் ஒன்றியம், கிழாங்குண்டல் ஊராட்சியில் ஜே.எஸ்.டபிள்யூ எனும் தனியார் காற்றாலை நிறுவனம் மின்  பாதை அமைத்து வருகிறது. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையோரமாக பெற்ற அனு மதிக்கு முரணாக, அரசுக்கு சொந்தமான பனை மரங் களை வெட்டியும், சாலையில் உரிய இடைவெளி விடா மலும் முறைகேடாக மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தடுத்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 30 விவசாயிகளை வெள்ளியன்று காவல் துறை  கைது செய்துள்ளது.  தாராபுரம் வட்டாட்சியர், தனியார் காற்றாலை நிறுவ னமான ஜே.எஸ்.டபிள்யூக்கு ஆதரவாக செயல்படுவ தாகவும், தனியார்  நிறுவனங்களுக்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அப்பாவி விவசாயிகளை கைது  செய்து சேவகம் செய்கிறது என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கதவணையிலிருந்து தண்ணீர் திறப்பு

சேலம், ஏப்.11- எடப்பாடி அருகே கோனேரிப்பட்டி கதவணையில் பராமரிப்பு பணிக்காக, அங்கு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், செக்கானூர் நீர்த்தேக்கம் வந்தடை யும். அங்கிருந்து பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை நீர் மின் கதவணை, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை நீர்மின் கதவணை உள்ளிட்ட பகுதியை கடந்து செல்கி றது. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக ஏப்.9 ஆம்  தேதி முதல் கோனேரிப்பட்டி கதவணையில் தேக்கி  வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற் றப்பட்டதால், மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. நீர்த் தேக்க பகுதியிலிருந்து, அரசிராமணி பேரூராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக, பொதுமக்களுக்கு குடி நீர் விநியோகிக்கபட்டு வந்தது. தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், விவசாய நிலங்களுக்கு தண் ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயி கள் கவலையடைந்துள்ளனர். மீண்டும் ஏப்.26 ஆம்  தேதி கோனேரிப்பட்டி நீர்மின் கதவணையில் தண்ணீர்  தேக்கி வைக்கப்படும். இன்னும் 15 நாட்களுக்கு இந்த  பராமரிப்பு பணி நடைபெறும் என்பதால் அரசிராமணி பேரூராட்சி மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என செயல் அலுவலர் தம்பிதுரை தெரி வித்துள்ளார்.

கோடை விழா: தயாராகும் ஏற்காடு!

சேலம், ஏப்.11- ஏற்காட்டில் நடைபெறவுள்ள கோடைவிழா மலர் கண்காட்சிக்கானப் பணியில் தோட்டக்கலைத் துறை யினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வரும் மே மாதம் கோடை விழா நடைபெறவுள்ளது. இதற்காக ஏற்காடு  தோட்டக்கலைத் துறையினர் பசுமைக் குடிலை உரு வாக்கி 2 லட்சம் மலர் விதைகளை 10 ஆயிரம் தொட்டி களில் நட்ட நிலையில், அவை தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணி களை கவர்வதற்கு 40 ஏக்கா் பரப்பளவில் உள்ள ஏற்காடு தாவரவியல் பூங்காக்களில் ஆயிரக்கணக்கில் மலர்த் தொட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. புல்தரைகளில் வட்ட வடிவில் நடப் பட்ட சால்வியா செடிகள் தற்போது பூத்துக்குலுங்கு கின்றன. மேலும், கொல்கத்தா டோலியா செடிகள், மாரி கோல்ட் பூச்செடிகளை நட்டு சுற்றியும் மூங்கில் தட்டி களை கட்டி வளர்த்து வருகின்றனர். பசுமைக் குடில்க ளுக்கு மலர் தொட்டிகளை மாற்றும் பணிகளை செய்து  வரும் தோட்டக்கலைத் துறை பணியாளர்கள், மலர்  செடிகளுக்கு நீர் பாய்ச்சி பராமரிப்பு பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்க  கூடுதல் கவுண்ட்டர் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஏப்.11- தருமபுரி அரசு மருத்துவமனையில் விரைவாக  மருந்து, மாத்திரை கிடைக்க கூடுதல் கவுண்ட்டர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 2  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து  செல்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை யில் காலை முதல் மதியம் வரை பல்வேறு சிகிச்சை பெற  வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை மருத்துவர்கள் பரிசோதித்த பின் சிகிச்சை  அளித்து, பரிந்துரை சீட்டில் மருந்து மற்றும் மாத்தி ரைகள் எழுதி தருகின்றனர். மருந்து, மாத்திரைகளை வழங்கும் மையம் அரசு மருத்துவமனை வளாகத்தின் வடக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரு கிறது. இங்கு 6 கவுண்ட்டர்களில் மருந்து, மாத்திரை கள் வழங்கப்படுகின்றன. அதிக கூட்டம் காணப்படு வதால் மாத்திரைகளை வாங்க பொதுமக்கள் நீண்ட  நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்கு வரும் முதியவர் கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, நோயாளி கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு விரைவாக மருந்துகள் கிடைக்க, கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்க வேண்டும். மேலும், கூடுதல் பணியாளர்களை நிய மித்து, மாத்திரைகளை சாப்பிடுவது குறித்து விளக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.