tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தேர்வில் தோல்வி: மாணவர் தலைமறைவு

கோவை, ஜூன் 20– 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து மன உளைச்ச லுக்குள்ளான மாணவர் தலைமறைவான நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை பட்டணம் பகுதியைச் சேர்ந்த மாணவன் கார்த்தி கேயன் (19), பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறியுள் ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மாணவனைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தி யுள்ளனர்.

ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

தருமபுரி, ஜூன் 20- காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக் கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையிலிருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம், உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்த நீரானது தமிழகம் வந்தடைந்த நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று காலை நிலவரப் படி விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 16  ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகி றது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, ஆற்றில் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தற்கா லிக தடை விதித்துள்ளார். இதையடுத்து பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை அடைக்கப்பட்டுள்ளது.