மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூன் 20– மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில், ஈரோடு மேற் பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, துணைச் செயலாளர் வி.தமிழரசன் தலைமை வகித்தார். எம்.ஆர்.பெரியசாமி வாழ்த்தி பேசினார். மாநில துணைத்தலைவர் பி.ஸ்ரீ தேவி விளக்கவுரையாற்றினார். இதே போன்று, பெருந்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கோட்டத் தலைவர் ஆர். பழனி தலைமை ஏற்றார். இதில், செயலாளர் வி.ஏழுமலை, துணைத்தலைவர் சுப்பி ரமணி, ஓய்வுபெற்றோர் நலஅமைப்பின் தலைவர் கே. குப்புசாமி, ஈரோடு மண்டல செயலாளர் சி.ஜோதிமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், கே.பழனிசாமி நன்றி கூறினார். கோவை கோவை, டாடாபாத் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு கிளைச் செயலாளர் எம்.மணிகண்டன் தலைமை ஏற் றார். இதில், மாநிலச் செயலாளர் டி.மணி கண்டன், மண்டலச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், கோவை மாநகரத் தலைவர் வி.மதுசூதனன், மைய கோட்டத் தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.