tamilnadu

img

பராமரிக்கப்பட்ட குழாய்களால் தினந்தோறும் வீணாகும் குடிநீர்

பராமரிக்கப்பட்ட குழாய்களால் தினந்தோறும் வீணாகும் குடிநீர்

நாமக்கல், ஜூன் 6- ஒன்றிய அரசின் அம்ருத் திட் டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடி நீர் குழாய்களை முறையாக பரா மரிக்காததால், தினந்தோறும் குடி நீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும், சுமார் ஆயிரம் வீடு களுக்கு ஒன்றிய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டு களாகவே இந்த பணிகள் நடை பெற்று வரும் நிலையில், முறை யான பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளாததால் நகரின் பல்வேறு பகுதிகளில் குழாய்கள் உடைந்து தினந்தோறும் குடிநீர் வீணாகி வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்றிய அர சின் திட்டத்தால் நகரின் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் தொடர்ச் சியாக வெளியேறும் குடிநீரால், தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப டும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்  கூறுகையில், கடந்த சில ஆண்டுக ளாகவே அம்ருத் திட்டத்தில் நகராட் சியின் பல்வேறு இடங்களிலும் குடி நீர் குழாய்கள் வீட்டுக்கு வீடு  அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டம் முழுமையாக வெற்றி அடைந்ததா? என கேட்டால் நிச்சய மாக இல்லை. ஆங்காங்கே சாலை களை தோண்டி விடுகிறார்கள். அதை முறையாக மூடுவதும் இல்லை. மேலும், குடிநீர் குழாய் பொருத்தப்பட்ட இடங்களிலும் உரிய பராமரிப்பு இல்லாததால், குடிநீர் வீணாக சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நகராட்சியின் பல்வேறு இடங்களில் தார்ச்சாலை கள் குண்டும், குழியுமாக காணப் படுவதற்கும் இந்த அம்ருத் திட்டம் காரணமாக உள்ளது. நகராட்சி நிர் வாகம் உரிய முறையில் நடவ டிக்கை எடுத்து, இந்த திட்டத்தை முழுமையாக பாதிப்பின்றி பொது மக்களுக்கு கொண்டு செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.