tamilnadu

img

புதிய பில்லிங் முறையை அவசர கதியில் நிறைவேற்றாதீர்!

புதிய பில்லிங் முறையை அவசர கதியில் நிறைவேற்றாதீர்!

சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

கோவை, ஜூன் 20– ஊழியர் பற்றாக்குறை, உரிய கட்டமைப்பு வசதிகள் ஏதும் செய் யாமல் புதிய பில்லிங் முறையை அவசர கதியில் நிறைவேற்றக்கூ டாது என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் 8 ஆவது மகாசபை, கோவை கணபதி பகுதி யில் உள்ள சி.ஐ.டி.யு இன்ஜினிய ரிங் சங்க அலுவலகத்தில், தோழர் எஸ்.ஆறுமுகம் நினைவரங்கத்தில்  நடைபெற்றது. சங்கத்தின் மாட் டத் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இந்த மகாசபை யில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின்  சம்மேளனம் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் பங்கேற்று சிறப் புரையாற்றினார். முன்னதாக மாநாட் டுக் கொடியை ஆர்.மணிவண்ணன் ஏற்றினார். மாவட்ட துணை தலை வர் ஜி.சரவணன் வரவேற்றார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி மகாசபையை துவக்கிவைத்து உரையாற்றினார்.  மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.ஜான் அந்தோணி ராஜ் வேலை அறிக்கை யையும், பொருளாளர் எஸ்.ராம கிருஷ்ணன் நிதி நிலை அறிக்கை யையும் முன்மொழிந்தனர். சிஐ டியு மாவட்டப் பொருளாளர் ஆர். வேலுச்சாமி, குடிநீர் வடிகால் வாரிய சங்க மண்டல பொதுச்செயலாளர் ஆர்.சரவணன் ஆகியோர் வாழ்த்து ரையாற்றினார். இதில், மாநாட்டில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை குறைத்து,  தனியார் மனமகிழ் மன்றங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். 23 ஆண்டுக ளுக்கு மேலாக பணியாற்றும் ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும்,  அரசின் என்டு டூ என்ட்  புதிய பில்லிங் நடைமுறையை அவ சரகதியில் நிறைவேற்றக்கூடாது. டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஏ.ஜான் அந் தோணிராஜ், பொதுச் செயலாள ராக கே.செந்தில்பிரபு, பொருளாள ராக ஆர். ராமகிருஷ்ணன் உள் ளிட்ட 12 நிர்வாகிகள் மற்றும் 30 பேர்  கொண்ட மாவட்டக்கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலா ளர் கே.திருச்செல்வன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், 22 ஆண்டு களாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு அரசு ஊழி யர்களுக்கு இணையான ஊதியம்  வழங்க வேண்டும். மதுரை, விருது நகரில் பணி நிரந்தர வளங்கள் அம லாக்க அதிகாரி டாஸ்மாக் ஊழியர் கள் பணி நிரந்தரம் செய்ய தகுதி உடையவர்கள் என உத்தரவு வழங் கியுள்ளார். இந்த உத்தரவு அடிப்ப டையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 24,000 மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். அதேபோல் தற்போது டாஸ் மாக் கடைகளில் புதிய பில்லிங் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை அவசர காலத்தில் நடை முறைப்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைக்கி றோம், வரும் ஜூலை 9ஆம் தேதி  மத்திய தொழிற்சங்கம் நடத்தக் கூடிய நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் டாஸ்மாக்  ஊழியர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர், என்றார். முடிவில், மாவட்ட துணைத்தலைவர் எம்.ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.