பெரிய நாயக்கன் பாளையம் பேரூராட்சி 1 ஆவது வார்டு கவுன்சிலரும், ஜோதிபுரம் கட்சி கிளை உறுப்பினருமான ப.உமாவதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை அமைப்புக்குழு சார்பில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் வெளியிட்டிருக்கும் அறிகையில் கூறியிருப்பதாவது :
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரம் கட்சி கிளையின் உறுப்பினரும், 1 ஆவது வார்டு கவுன்சிலருமான ப.உமாவதி, மற்றும் ஜெ.எம்.பழனிச்சாமி ஆகியோர் கட்சி முடிவுக்கு மாறாகவும், கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலுக்காகவும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்னர். எனவே இவர்களோடு கட்சி ரீதியாக எவ்விதமான தொடர்பும் கொள்ள வேண்டாம் எனக் கட்சி அணிகளைக் கட்சியின் கோவை மாவட்ட அமைப்புக்குழு சார்பாகக் கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது