கோயம்புத்தூர், நவ.15– சிறு, குறு தொழில்களை பாது காக்கும் நடவடிக்கையில் இருந்து ஒன்றிய பாஜக அரசு தவறிவிட்டது எனவும், எம்எஸ்எம்இ நிறுவனங் களை அபகரிக்க கார்ப்பரேட் நிறு வனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிற ஆபத்து உள்ளதாக தொழில் முனைவோர்களுடனான கலந்து ரையாடல் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி கூறினார். கோவை - அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ)யில் தொழில் முனைவோருடனான கலந்துரை யாடல் கூட்டம் திங்களன்று நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் அகில இந்திய பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி பங் கேற்றார். முன்னதாக, தொழில் முனை வோர்கள் பங்கேற்று பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினர். இதில், பம்ப் செட் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள் ளது. இது விவசாயிகளை கடுமை யாக பாதித்துள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட் கள் தேக்கமடைந்துள்ளது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியா வில் முதலீடு செய்தால், அவர் களுக்கு நிலம் முதல் மானியம் வரை பல சலுகைகள் வழங்கி வர வேற்கிறது ஒன்றிய அரசு. ஆனால், சிறுதொழில் செய்யும் நிறு வனங்கள் தங்கள் தொழில்களை நடத்துவதற்காக அரசிடம் இருந்து மானியங்கள் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதை வெளிப் படுத்தினர். மேலும், தற்போது தொழில் துறை சந்தித்து வருகிற பல்வேறு நெருக்கடிகள் குறித்தும் கருத்து களை முன்வைத்தனர்.
இக்கூட்டத்தில், ஐசிசிஐ-யின் கோவை தலைவர் பி.ஸ்ரீராமுலு, தொழிற்துறையின் சபையின் முன் னாள் தலைவர் டி.பாலசுந்தரம், தென்னிந்திய பொறியியல் உற் பத்தியாளர்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் டி.விக்னேஷ் உள்ளிட்ட திரளான தொழில்முனைவோர் பங்கேற்றனர். இவர்களது கருத்துக்களை உள்வாங்கிய சிபிஎம் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி பேசு கையில், மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்கும் இந்தியா வை, இந்துத்துவ நாடாக மாற்ற கார்ப்பரேட் - மதவாத கூட்டணி யை ஒன்றிய பாஜக அரசு முற்படு கிறது. இந்தியை திணிப்பது, நாட் டின் கூட்டாட்சி முறையை அழிப் பது, மத்திய அமைப்புகளின் செயல் பாடுகளை நசுக்குவது போன்ற நட வடிக்கைகள் தொழில் அமைதி யை கெடுக்கும்; வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் (எம்எஸ்எம்இ) சிறு, குறு நிறு வனங்களை வலுப்படுத்த வேண் டும். ஆனால், ஒன்றிய அரசு இந்நிறு வனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறது. இதனால் சிறு, குறு தொழில்கள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கிறது. நீங்கள் தான் (தொழில் வர்த்தக சங்கங்கள்) அவற்றை மீட்டெடுக்க வேண்டும்
நாட்டின் தற்போதைய பொரு ளாதார நிலை, எம்எஸ்எம்இ நிறு வனங்களுக்கான இடத்தை பறிக்கும் சூழ்நிலையை உரு வாக்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் இதிலும் தலையிட துவங்கியுள்ளது, என்றார். மேலும், உறுப்பினர்களின் கருத்துகளை கேட்ட யெச்சூரி, அவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அர சுக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்ப தற்கான நடவடிக்கையை மேற் கொள்வதாக உறுதியளித்தார். முன்னதாக, கோவையிலி ருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை வேண்டும் என்று தொழிற்துறை உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதில ளித்த மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், இக்கோரிக் கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத் திற்கு கீழ் உள்ள கோவையை, தனி கோட்டமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.