சிபிஐ மூத்த தோழர் எஸ்.மணிவேல் மறைவு சிபிஎம் அஞ்சலி
நாமக்கல், ஏப்.23- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ். மணிவேல் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சேலம் மாவட்ட முன்னோடியும், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினருமான எஸ்.மணிவேல் (70) செவ்வாயன்று திருச்செங்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் கால மானார். கம்யூனிஸ்ட் கட்சியில் 1976 ஆம் ஆண்டு ஆரம்ப நிலை உறுப்பினராக சேர்ந்து, சேலம் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், நாமக்கல் மாவட்டம் உருவான பிறகு மாவட்டச் செயலாளர், கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர், மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் என்ற நிலைக்கு படிப்படியாக உயர்ந்தவர். தொழிற்சங்க அரங்கிலும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நிலை யில் செயல்பட்ட அவரது உடலுக்கு பல்வேறு தரப்பி னர் அஞ்சலி செலுத்தினர். திருச்செங்கோடு சன்னதி தெருவிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உட லுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், புதனன்று மாவட்டச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், எஸ்.தமிழ்மணி, என். வேலுச்சாமி, எம்.கணேசபாண்டியன், சு.சுரேஷ், மாவட் டக்குழு உறுப்பினர்கள், நகரச் செயலாளர் சீனிவா சன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேக்சிகேப் வாகன உரிமையாளர்கள் மனு
சேலம், ஏப்.23- பர்மிட்டை உயர்த்த வேண்டும், என வலியுறுத்தி மேக்சிகேப் வாகன உரிமையாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்ட மேக்சிகேப் வாகன உரிமையாளர் கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர், ஆட்சியர் அலுவல கத்தில் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், தமிழக மோட்டார் வாகன சட்டப்பிரிவு 1974இன்படி, பிரிவு 48 இன் மூலம் மேக்சிகேப் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 50 ஆண்டுகாலமாக பர்மிட்டில் அனும திக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கையில் எந்தவித மாற் றம் செய்யவில்லை. 21 சீட் வரை டிராவல்ஸ் வாகனங்க ளுக்கு பர்மிட்டை உயர்த்தி தரக்கோரி, பல ஆண்டுக ளாக அரசிடம் முறையிட்டு வருகின்றோம். ஆனால், எந்த அரசாங்கமும் தங்களது கோரிக்கைக்கு தீர்வு காண முன்வரவில்லை. மேலும், பாடிகட்டி இயக்கப்படும் கோச் வாகனங்களில் 20 சீட்டுகள் வரை அமைக்கப் பட்டதால், எங்களால் அண்டை மாநில வாடகைக்கு எங்க ளது கோச் வாகனங்களை இயக்க முடிவதில்லை. இத னால், தமிழ்நாட்டிலுள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களின் குடும்பத்தினர் தவித்து வரு கின்றனர். எனவே, 12+1 சீட் பர்மிட்டை, 20+1 சீட் பர்மிட்டாக உயர்த்தி, சுற்றுலாத் துறையை காக்க முன் வர வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணல் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
கோபி, ஏப்.23 – கிரசர் மணல் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என கட்டிட பொறியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பேட்டியளித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டிட பொறியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பிரபு புதனன்று கோபியில் பேட்டியளித்தார். அப்போது, தமிழகம் முழு வதும் கட்டுமான துறையில் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்களில் எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் ஆகிய கிரசர் மணல்களின் பங்கு முதன்மையானதாக உள்ளது. கடந்த இரண்டு மாத்திற்கு முன்பு ரூ. 5 ஆயிரமாக இருந்த எம்.சாண்ட் கிரசர் மணல் தற்போது ரூ. 6 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக இந்த தொழிலை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலை இழக்கும் அபாயமும் கட்டுமான தொழில் முடங்கும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது. எம்- சாண்ட் பி- சாண்ட் விலை உயர்வு காரணமாக அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் புதிய தனி வீடுகளின் விலை உயர்ந்து நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கல்குவாரிகளில் இயற்கையாகவும் சேத மின்றியும் கிடைக்க கூடிய கிரசர் மணலை செயற்கை யாக திடீரென விலையேற்றம் செய்யும் நடவடிக்கை களை கட்டுக்குள் கொண்டு வர இதற்கென தனிவாரி யம் ஒன்றை அரசு ஏற்படுத்தி இத்தொழிலை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.