குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவதி சிபிஎம் போராட்ட அறிவிப்பு
நாமக்கல் ஜூன் 16 - பள்ளிபாளையம் அருகில் குப்பை களுக்கு தீ வைத்துவிடுவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும் அவ திக்குள்ளாவதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்ட அறிவிப்பை செய் துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் அடுத்துள்ள புதுப்பாளையம் அக் ரஹாரம் பகுதியில் ஏராளமான குடி யிருப்புகள் உள்ளது. விசைத்தறி தொழி லாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்ற னர். இந்நிலையில், பள்ளியின் அருகே குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் சிலர் குப் பைக்கு தீ வைத்து விடுகின்றனர். இத னால், காற்று மாசுபாடு ஏற்பட்டு, மாண வர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். குப்பைகளை பெறுவதற் கான மாற்று ஏற்பாடுகள் குப்பைத் தொட்டிகள் இல்லாததால், இங்கே அதிக அளவு குப்பைகள் பொதுமக் களால் கொட்டப்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பாளையம் கிளையின் சார்பில் செவ்வாயன்று (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு தட்டிகள் ஆங் காங்கே வைக்கப்பட்டுள்ளது.