ஊழல் செய்த தனியார் ஒப்பந்த நிறுவனம்
சிஐடியு ஆர்ப்பாட்டம்
சேலம், மே 30– ஆத்தூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் இபிஎப், இஎஸ்ஐ தொகையை கட்டா மல் ஊழல் செய்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தைக் கண் டித்து சிஐடியுவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி யில் 180க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் 120க்கும் மேற்பட்டோர் தனியார் ஒப் பந்த நிறுவனத்தின் கீழ் பனியாற்றி வருகின் றனர். இந்த தொழிலாளர்களுக்கு 20 மாதத் திற்கு மேலாக சம்பளத்தில் பிடித்தம் செய்த இபிஎப், இஎஸ்ஐ தொகை சம்மந்தபட்ட அலுவலகத்தில் கட்டாமல் ஊழல் நடைபெற் றுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு சீருடை, முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுக் கமலும், 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அடிமைபடுத்தி உழைப்பு சுரண்டல் செய்து வருவதைக் கண்டித்து சிஐடியு சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் எ.முருகேசன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், போக்குவரத்து ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் எ.கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ தொழலாளர் சங்க நிர்வாகி பெரியசாமி மற்றும் 70க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.