தமிழகத்தில் இன்று 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தனியார் மருத்துவமனையில் 21 பேர், அரசு மருத்துவமனையில் 46 பேர் என 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,520 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 86,928 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 73,54,050 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.