tamilnadu

img

கோவை : தனியார் மருத்துவமனையில் மருத்துவர் உட்பட 5 பேருக்கு கொரோனா

கோவை, ஜன.4- கோவையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று மருத்துவர்கள் உள்ளிட்ட 5  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிக ரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிக ரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  சென்னை,  கோவை  உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரிசோதனை கள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் 5 ஆவது வீதியில் செயல்பட்டு வரும் தனியார் கிளினிக்கில் பணிபுரி யும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில், மூன்று மருத்துவர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதி காரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு  மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும், கடை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா சோதனை நடத்தி வருகின்றனர். கோவை நக ரின் முக்கிய பகுதியில் 3 மருத்துவர்கள் உட்பட 5 பேருக்கு ஒரே இடத்தில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.