மணிமேகலை விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து
சேலம், ஜூன் 21- மாநில அளவில் மணிமேகலை விருது பெற்றவர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வாழ்த்து தெரி வித்துள்ளார். சென்னையில் ஜூன் 11 ஆம் தேதியன்று நடைபெற்ற விழாவில் மாநில அளவில் மணிமேகலை விருதுகளை பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 சமுதாய அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி சனியன்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், 2024 - 25 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்குவதற்கு தகுதி யான சமுதாய அமைப்புகளிடமிருந்து முன்மொழிவுகள் பெறப் பட்டு அனுப்பப்பட்டது. அதில், சேலம் மாவட்டத்தில் 4 அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, என் றார்.