ஆ.ராசா குறித்து அவதூறு: புகார்
மேட்டுப்பாளையம், மே 30– மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ. ராசா குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வினர் வெள்ளியன்று புகார் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள உள்ளூர் வாட்ஸ் அப் குழுவொன்றில் ஆ.ராசா குறித்து அருவருக்க தக்க வகையில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் பாராளுமன்றத்தில் அசைவ உணவு வழங்கப்படுவதில்லை என ஆ.ராசா தெரிவித்த கருத் துக்கு எதிராக, அவரை அவமானப்படுத்தும் விதமாக வும், கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பியுள்ளனர். பகை உணர்வை தூண்டும் வகையிலும் பொய் தகவலை பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஒயிட் பாபு என்கின்ற முகமது ரபீக் என்பவர் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகாரளித்தார். முன்னதாக, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் காவல் நிலை யத்திற்கு திமுக-வினர் திரளாக வந்திருந்தனர்.
பணி நிறைவு பாராட்டு விழா
தருமபுரி, மே 30- பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவல கத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்.குணசேகரனுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவரும், ஊரக வளர்ச்சித் துறையில் பாலக் கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்.குணசேகரன்-னின் பணி நிறைவு பாராட்டு விழா பாலக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. இவ்விழாவில், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ஜோதிகணேசன், ரேணுகா, மேலாளர் குமரேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன், செயலாளர் ஏ.தெய்வானை, பொருளா ளர் அன்பழகன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ், பொருளாளர் வினோத்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், முன்னாள் செயலாளர் ஏ.சேகர், சத்துணவு ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்டச் செய லாளர் சி.காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், எஸ்.குணசேகரனுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது.
சேலம் மாமன்ற கூட்டத்தில் கைகலப்பு
சேலம், மே 30- சேலம் மாநகராட்சி கூட்டத்தில், திமுக மற்றும் அதி முக கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு மற்றும் அவசரக் கூட்டம், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப் பினர்கள் தங்கள் வார்டு பகுதியில் நிலவும் பிரச்ச னைகள் குறித்து எடுத்துரைத்தனர். அப்போது மாமன்ற அதிமுக உறுப்பினர் யாதவமூர்த்தி, அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது, என குற்றஞ்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இது கைகலப்பாக மாறியது. இதையடுத்து மற்ற உறுப்பினர்கள் வந்து அவர்களை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்ட னர். இதனால் மன்ற கூட்டம் பரபரப்பாகவே காணப் பட்டது.
ஓடையில் தேங்கி நிற்கும் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்
கோவை, மே 30- கரும்புக்கடை பாத்திமா நகர் வழியாக செல்லும் ஓடை யில் தேங்கி நிற்கும் கழிவுகளால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கோவையில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்துள் ளது. மேலும் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் நொய்யல் ராஜவாய்க்கால் மற்றும் ஆத்துப்பாலம் வழியாக செல்லும் ஓடைகள் மூலம் வெள்ளலூர், சிங்காநல்லூர், சூலூர் வழியாக திருப்பூர் செல்கிறது. இந்நிலையில் ஆத்துப் பாலத்தில் இருந்து கரும்பு கடை வழியாக செல்லும் நீர் வழிப் பாதையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் செல்வதா லும், தூர்வாரப்படாததாலும் கரும்புக்கடை பாத்திமா நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இத னால், நோய் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.