tamilnadu

img

கோவை: ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கோவை தனியார் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் உள்ள  பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் 2-ஆம் ஆண்டு மாணவருக்கு தாக்கி, மொட்டையடித்து ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும், செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அந்த  7 மாணவர்களை மீது ராக்கிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் 7 மாணவர்களும் கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் 7 பேரையும் சிறையில் அடைக்கப்பட்டனர். வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.