tamilnadu

img

சிஐடியு அமைப்பு தின கொடியேற்று விழா; பேரவை கூட்டம்

சிஐடியு அமைப்பு தின கொடியேற்று விழா; பேரவை கூட்டம்

சேலம், மே 30- சிஐடியு அமைப்பு தினத்தை முன் னிட்டு, வெள்ளியன்று கொடியேற்று விழா மற்றும் சிறப்பு பேரவை நடை பெற்றது. இந்திய தொழிற்சங்க மையத் தின் (சிஐடியு) 56 ஆவது ஆண்டு அமைப்பு தின விழா வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. அதன்ஒரு பகுதியாக, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் செங்கொ டியை ஏற்றி வைத்தார். இதைய டுத்து நடைபெற்ற சிறப்பு பேரவை கூட்டத்தில், சிஐடியு மாநிலச் செய லாளர் கே.சி.கோபிகுமார், மாவட்டச் செயலாள் ஏ.கோவிந்தன், மாவட்ட நிர்வாகி பி.பன்னீர்செல்வம் உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் சமுதாய நலக்கூடத்தில், சிஐடியு அமைப்பு தின மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ரங்கராஜ் சிறப்புரை யாற்றினார். இதில் சிஐடியு மாவட் டச் செயலாளர் ந.வேலுசாமி, பொரு ளாளர் ஏ.ரங்கசாமி, மோட்டார் இன் ஜினியரிங் தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் சு.சுரேஷ், வார்ப்பிங் சைசிங் தொழிலாளர் சங்க செயலா ளர் எம்.செங்கோடன், பொது தொழி லாளர் சங்க செயலாளர் கே.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கை களை கண்டித்து, ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத் தத்தை வெற்றிகரமாக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.