தையல் கலைஞர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க சிஐடியு வலியுறுத்தல்
கோவை, மே 8– தையல் கலைஞர்களுக்கு மூவாயிரம் ரூபாயாக ஓய்வூதி யத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. கோவை மாவட்ட தையல் கலை ஞர்கள் சங்கத்தின் 12 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம், புத னன்று கணபதிபுதூர் இன்ஜினிய ரிங் சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. மாவட்ட தையல் கலை ஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.மனோ கரன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பி.வெள்ளியங்கிரி வரவேற்றார். பொதுச் செயலாளர் ஆர்.வேலுசாமி வேலை அறிக்கை யையும், பொருளாளர் கு.லலிதா வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். இதில், தையல் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தையல் கலைஞர்களுக்கு தொழி லாளர் அரசு ஈட்டுறுதி (ESI) மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தை அறி முகப்படுத்த வேண்டும். அனைத்து நல வாரியங்களுக்கும் ஒரே மாதிரி யான உயர்த்தப்பட்ட பணப் பயன் களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களாக நிறைவேற்றப்பட் டன. மாநாட்டில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத் தில் கோவை மாவட்ட தையல் கலை ஞர்கள் சங்க துணைச் செயலாளர் ஆர்.பத்மநாபன், நிர்வாகிகள் வி. ஆண்டாள், கே.ரகுபதி, எம்.மணி மோகன், பி.மகேஸ்வரி மற்றும் திர ளான தையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கோவையில் நடை பெற உள்ள சிஐடியு மாநில மாநாட் டிற்காக, தையல் கலைஞர்கள் சங் கத்தின் சார்பில், முதல் தவணை யாக ரூபாய் ஒரு லட்சத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தியிடம் வழங்கினர். இந் நிகழ்வில் சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.கே.முத்து குமார் உள்ளிட்ட பலர் உடனிருந் தனர். நிறைவாக, தையல் சங்க துணைத் தலைவர் ஆர்.உத்திர வேணி கூறினார்.