கே.பாலகிருஷ்ணன் கடும் விமர்சனம்
கோயம்புத்தூர், அக். 27 - கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்ஐஏ வின் வளையத்தின் விசாரணைக்கு உட்பட்டவராக இருக்கிற நிலையில் இவர்களை கண்காணித்து செயல்பட வேண்டிய மத்திய உளவுத்துறை தவற விட்டுள்ளது; மத்திய உளவுத்துறை யிலும் குறைபாடு உள்ளதை என்ஐஏ ஒப்புக்கொள்ள வேண்டும். இந்நிலை யில், அனைவரும் ஒன்று சேர்ந்து தீவிர வாதத்தை முறியடித்து மக்களைக் காப்பாற்றுகிற நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஆனால் அரசியல் ஆதாயத் திற்காக பாஜக பந்த் அறிவிப்பு செய்து, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை செய்கிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘அமைதியான கோவை அனைவருக் கும் தேவை’ என்ற அடிப்படையில் கோவையில் அமைதியைப் பேணிக் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அன்று நடந்ததை விபத்தாக நாங்கள் பார்க்கிறோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் செய்திகளைப் பார்க்கும்போது, அந்த விபத்து நடக்கா மல் இருந்திருந்தால் கோவையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி இருக்கும் என்பது விசாரணை யில் தெரியவருகிறது. விபத்து நடைபெற்றவுடன் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி, கைது செய்திருப்பது பாராட்டத்தக்கது. கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், உளவுத்துறை யை பலப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக அறிக்கை விட்டது. இந்நிலையில், முத லமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டத்தில், கோவையில், மூன்று காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், உளவுத்துறை பலப்படுத்தப் படும் என்றும் தமிழக அரசு அறி வித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. மேலும், இந்த சம்பவத்தில் பன்னாட்டு கூட்டணி சம்பந்தப்பட்டிருக்கும் சூழ லில் இதனை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பதும் தமிழக அரசின் சரியான நடவடிக்கை.
இப்படியான சம்பவம் நடைபெறு வதற்கான முகாந்திரங்களை ஏன் உளவுத்துறை கண்டுபிடிக்க முடிய வில்லை. உளவுத்துறையில் உள்ள குறைபாடுகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் குறை எதிர் காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். இதேபோன்று என்ஐஏ 50க்கும் மேற்பட்ட நபர்களை விசாரணை வளை யத்திற்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரி ழந்த நபரும் என்ஐஏவின் விசார ணைக்குட்பட்டவராக இருந்திருக் கிறார். ஆனால், மத்திய உளவுத்துறை இவர்களை கண்காணிக்க தவறியுள்ள குறைபாடும் நிகழ்ந்திருக்கிறது. என்ஐஏ பணியிலும் மந்தம் ஏற்பட்டுள்ளது என்கிற இந்த எதார்த்தத்தை என்ஐஏ வும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
மதத்திற்கு தொடர்பில்லை
அதேநேரத்தில், கைது செய்யப் பட்டிருப்பவர் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே ஒரு அந்த மதத்தை ஒட்டு மொத்தமாக விரோத மாக பார்க்கக்கூடிய பார்வைக்கு இடமளிக்கக்கூடாது. எந்த ஒரு குற்றம் நடந்தாலும் குற்றத்தில் ஈடுபட்ட வர்கள் ஏதோ ஒரு மதம் அல்லது சாதியை சார்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அதற்காக அந்த மொத்த சமூகமும் குற்ற வாளி என்பது போல சித்தரிக்கக் கூடாது. இந்த சம்பவத்திற்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அனைத்து ஜமாத் கூட்டத்தினைத் தொடர்ந்து, அனைத்து ஜமாத் தலை வர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்க வகை யில் உள்ளது. தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை பகிரங்கமாக வெளிப் படுத்தியுள்ளனர்
அரசியல் ஆதாயம் தேடும் பாஜக
இந்த சூழ்நிலையில் வருகிற 31ஆம் தேதி பாஜக பந்த் என்று அறிவித்துள்ளது. இப்போது பந்த் நடத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? சம்பவம் நடந்தவுடன், அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணை நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. தேசியப் புலனாய்வு முகமையிடம் தமிழக அரசு அந்த வழக்கை ஒப்படைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக் கத்தோடும், அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் பாஜக மேற்கண்ட அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. அது மேலும் பதற்றத்தைத் தான் அதிகரிக்கும். இம்மாதிரியான சூழலில் அரசியல் கட்சியினர் ஒன்றிணைத்து தீயணைப்பு நிலையங்கள் போல செயல்பட வேண்டும். பதற்றமான சூழலில் பாஜக அறிவித்துள்ள பந்த் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல உள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திட வேண்டும். கோவையின் அமைதியை உறுதி செய்ய அனைத்து கட்சியினரின் ஆலோசனையைக் கேட்டு செயல் பட வேண்டும். இதேபோன்று விசாரணை நடைபெறும் போது காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் இருந்து எந்த விதமான ஆத்திரமூட்டலுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. இந்த பந்த் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.