tamilnadu

img

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க வங்கிகள் கண்காணிக்கப்படும் - தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநிலத் தேர்தல் அலுவலர் சத்திய பிராதா சாகு ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,

பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யத் தேர்தல்  அலுவலர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் ,கோவையில் பாதுகாப்புப் பணியில் ஏற்கனவே மூன்று துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தேர்தலில் முறைகேடாகப் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க, வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகமாகப் பணம் வரவு வைக்கப்பட்டாலும்,வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.தேர்தலில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது பணம் கொடுப்பது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றைப் பொதுமக்களே நேரடியாகப் புகார் தெரிவிக்க சி-விஜில் என்ற செயலி  உள்ளதாகக் கூறினார்.

அதில் புகார் பதிவிடப்பட்ட 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் வயோதிகர்கள் இந்த தேர்தலில் சிரமம் இல்லாமல் வாக்களிக்க சக்சம்  என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.அவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க, தேர்தல் அதிகாரி வீட்டிற்குச் சென்று நேரடியாக வாக்குகளைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.கடந்த பத்து நாட்களாக வருவாய்த் துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்து வருவதால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.