tamilnadu

தீக்குளிக்க முயற்சி

தீக்குளிக்க முயற்சி

தருமபுரி, ஜூன் 16 – காவல்துறையினர் நட வடிக்கை எடுக்காததால் பெண் ஒருவர் தருமபுரி ஆட் சியர் அலுவலகம் முன்பு  குடும்பத்துடன்  தீக்குளிக்க  முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்த பாடி கிராமத்தை சேர்ந்த வர் பாஞ்சாலி. இவருக்கு இரண்டு பெண் குழந்தை மற் றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவர் அதே பகு தியைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரிடம் மாதாந்திர சீட்டு போட்டுள்ளார். ஒரு லட்ச ரூபாய் சீட்டில் சேர்ந்து  மாதமாதம் சீட்டுத் தொகையை கட்டி வந்துள் ளார். இந்நிலையில்   பாஞ்சாலி யின் சீட்டு முதிர்வடைந்து தமிழ்மணியிடம் சீட்டு தொகையான 94 ஆயிரம் ரூபாய் பாஞ்சாலி கேட்டுள் ளார். ஆனால், பணம் கொடுக்காமல் மூன்று வரு டங்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலை யத்தில் பலமுறை புகார்  அளித்தும், எந்த ஒரு நட வடிக்கையும் எடுக்க வில்லை.  மனஉளைச்சலுக்கு உள் ளான இவர், திங்களன்று தரு மபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு, தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் வந்து, மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை யடுத்து, பணியில் இருந்த  காவலர்கள் மண்ணெண் ணெய் கேனை பிடுங்கி  அவர்களை மீது தண்ணீர்  ஊற்றி காப்பாற்றினர். பின்னர் காவல்நிலையம் அழைத்து சென்று விசா ரணை மேற்கொண்டனர்.