tamilnadu

img

தேசிய பார்முலா 4 கார் பந்தையத்தில் அஸ்வின் தத்தா முதலிடம்

கோவையில் நடைபெற்ற 25வது தேசிய பார்முலா 4 கார் பந்தயத்தில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

எஃப்.எம்.எஸ்.சி.ஐ மற்றும் ஜேகே டயர் இணைந்து நடத்திய 25வது தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயம் கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்றது. சனிக்கிழமை துவங்கிய இந்த போட்டிகளில் முதல் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது.  இதில் எல்.ஜி.பி பார்முலா 4 ஜே.கே. டயர்  நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயங்களும், ஜேகே டயர் மற்றும் ராயல் என்.ஃபீல்.டு காண்டினண்டல் கோப்பை, ஜேகே டயர் எண்டியுரன்ஸ் கோப்பைக்கான மோட்டார் சைக்கிள் பந்தயமும் நடத்தபட்டது. 

மைதானத்தில் அனல் பறக்கும் விதமாக நடைபெற்ற  எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் 2 மற்றும் 3 வது ரேஸ் பந்தயங்களில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்து அசத்தினார். ஆர்யா சிங் இரண்டாம் இடத்தையும், திஜில் ராவ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.  இதேபோல் 3வது ரேஸில் சரண் விக்ரம் மார்ஸ் 2வது இடத்தையும், ஆர்யா சிங் 3வது இடத்தையும் பிடித்தனர்.  இதில் 2 மற்றும் 3 வது ரேசில் முதலிடம் பிடித்த அஸ்வின் தத்தா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.