சென்னை,ஜூன் 14- அருணாச்சலப் பிர தேசத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் கோவையைச் சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. கடந்த 3ஆம் தேதி அஸ்ஸாமில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட ஏ.என். 32 ரக விமானப்படை விமானம் அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர். 13 பேரின் புகைப்படங்களையும் விமானப்படை வெளி யிட்டுள்ள நிலையில், அதில் கோவையைச் சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் இடம் பெற்றுள்ளார் . கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர், கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததாகக் கூறப்படு கிறது. விமானப்படையில் ஸ்குவாட்ரன் லீடர் ஆக பணியாற்றி வந்த அவர், கேரள புயல் வெள்ளத்தின் போது மீட்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர் எனவும் கூறப்படு கிறது. உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 14) குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
சபாநாயகர் கார் ஓட்டுநர் கைது
சென்னை,ஜூன் 14 பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அமரேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாய்தகராறின்போது பெண்ணை கத்தியால் குத்திய தமிழக சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுநர் ஆதிமூலராமகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.