tamilnadu

img

வார்த்தைகளின் வீரியம் தெரிந்தே பேசும் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோயம்புத்தூர், செப். 27 - காவல் துறை அதிகாரிகளை எச்சரிப்பது, நாட்டையே முடக்கு வோம் என சொல்வது என  பேசும் அண்ணாமலை வார்த்தை களின் வீரியம் தெரிந்தே பேசி யுள்ளார். மாநில அரசை, முதல்வரை, காவல் துறையை மிரட்டும் அண்ணாமலையை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கோவையை பதற்றமான இடமான  மாற்றி  விடக்கூடாது. கோவையில் பாஜக நடத்திய  ஆர்ப்பாட்டம் மூலம்  கோவை அமைதியாக இருக்க ஆர்எஸ்எஸ், பாஜக விரும்ப வில்லை என தெரிகின்றது. கோவை கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக பாஜக தலைவர்  அண்ணாமலையை கைது செய்ய வேணடும். மாநில முதல்வரை மிரட்டும் விதமாக அண்ணாமலை  பேசுகின்றார். தமிழக  காவல் துறையை மிரட்டுகின்றார், பேட்டை ரவுடியை போல அண்ணா மலை  பேசுகின்றார் என குற்றம் சாட்டிய கே.பாலகிருஷ்ணன். 356 ஆவது பிரிவை பிரகடனப்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர  திட்ட மிடுகின்றனர் என்றார். ஓட்டு வாங்கி ஜெயிக்க முடிய வில்லை என்பதால் மக்களால் தேர்வு  செய்யப்பட்ட ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர். அரசியல் கட்சி தலைவர் என்ற அடிப்படை  நாகரிகம் இல்லாத வகையில்  பேசு கின்றார். இத்தகைய பேச்சை அனு மதிக்கக் கூடாது  என்றார்.

மேலும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத் திற்கு நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை. சென்னை, மதுரை உயர் நீதி மன்றங்கள்  வரம்புக்கு உட்பட்டு செயல்படுகின்றதா என தெரிய வில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும். காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை? காந்தியை  கொன்றதை கொண்டாடியவர்களுக்கு ஊர் வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்து இருக்கின்றது. அந்தந்த ஊரில் காவல்துறை முடிவு செய்ய வேண்டியதை நீதிமன்றங்கள் முடிவு  செய்கின்றன. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கிறது. தமி ழகத்தில் வன்முறையை தூண்டு பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்து உள்ளது. பங்குச் சந்தை  வீழ்ச்சி யடைந்தே இருக்கின்றது. இவற்றை மூடி மறைக்க பாஜகவினர் தொடர்ந்து  சச்சரவுகளை கிளப்பி திசை திருப்பி வருகின்றனர். பொது மக்கள் பொருளாதார நடவடிக்கை களில் கவனம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற செயல் களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இவற்றை எதிர்த்து பிரம்மாண்ட மான போராட்டம் நடத்த வேண்டி இருக்கின்றது. பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல் துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவுக்கு சங்கர் என்பவரின் கருத்து களில்  உடன்பாடு கிடையாது என்றா லும்  நீதிமன்ற அவமதிப்பில் அவ ருக்கு அதிகபட்சமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் அந்தளவு தண்டனை கொடுத்தது கிடையாது. சிபிஐ, சிபிஎம், வி.சி.க ஆகிய மூன்று கட்சி களும் இணைந்து மனித நேய மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி  நடத்த இருக்கின்றோம். மதச்சார் பற்ற சக்திகள் ஒன்றிணைவது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு களுக்கு கண்களை உறுத்துகின்றது. பாஜக தலைவர் அண்ணாமலை காவல் துறை அதிகாரிகளை எச்சரி ப்பது, நாட்டையே முடக்குவோம் என சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும்? அவர் சாதாரண அர சியல்வாதி இல்லை, ஐபிஎஸ் படித்து விட்டு வந்திருக்கும் நிலையில் வார்த்தைகளின் வீரியம் தெரிந்தே  இப்படி பேசுகின்றார். மாநில  அரசை, முதல்வரை, காவல்துறை யை மிரட்டுவதை எப்படி அனு மதிக்க முடியும். அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு வன்முறையை வெளிப்படுத்தும் விதமான பேச்சாக  இருக்கின்றது.

நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது. ஆ.ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன். அவரது பேச்சை  வெட்டி ஒட்டி திரித்து ஒளிபரப்பி இருக்கின்றனர். வர்ணாசிரம தர்மத்தில் சூத்திரனை வேசியின் மகன் என்று சொல்லி இருப்பதை சொன்னார். இதற்கு வர்ணாசிரம தர்மத்தின் மீதுதான் கோவம் இருக்க வேண்டும். ஆனால் அதை  எடுத்து  சொன்னவர் மீது கோபப் படக் கூடாது. இறை நம்பிக்கை இருக்கின்ற வர்களையும் மனுதர்மம் சூத்திரன் என்றுதான் சொல்கின்றது. ஆ.ராசா சட்டத்திற்கு புறம்பாகவோ, யாரை யும் புண்படுத்தும் விதமாகவோ பேச வில்லை. ஆ.ராசாவை மட்டும் குறி வைத்து பா.ஜ.க  விமர்சிப்பது சாதி யக் கண்ணோட்டம் என்றுதான் பார்க்கத் தோன்றுகின்றது. இதை வைத்து பாஜக அரசியல் நாடகம் ஆடுகின்றது என்றார். இந்த பேட்டி யின் போது, கட்சியின் கோவை மக்க ளவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மபநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.

;