tamilnadu

img

வைப்பு நிதியை வழங்காமல் அடாவடி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம்

வைப்பு நிதியை வழங்காமல் அடாவடி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம்

சேலம், மே 14- மாற்றுத்திறனாளியின் வைப்பு நிதியை வழங்காமல் அடாவடியில் ஈடுபட்ட, கூட்டு றவு கடன் சங்க அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளி கள் மற்றும் வாலிபர் சங்கத் தினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், அம்மா பேட்டை நகர கூட்டுறவு கடன் சங்கம் எஸ்1308 கிளையில், மாற்றுத்திறனாளியான ஜோடேனி பணிபுரிந்து வருகிறார். இந்நிலை யில், அவருக்கு சேர வேண்டிய வைப்பு நிதியை, கடந்த எட்டு மாதங்களாக தராமல்  கூட்டுறவு சங்க நிர்வாகம் அலைக்கழித்து வந்தது. இதனைக் கண்டித்து அவர் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங் கத்தினர், கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து இரண்டு தினங்களுக்கு பிறகு, அவ ருக்கான வைப்பு நிதி வழங்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்தது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக, இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரிய சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.