tamilnadu

img

சின்னியம்பாளையம் தியாகிகளின் 75 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு....

கோயம்புத்தூர்;
தொழிலாளர் வர்க்கத்தின் வீரத்தியாகிகளான சின்னியம்பாளையம் தியாகிகளின் 75 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி தியாகிகளின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய வீரத்தியாகிகளை நினைவுகூரும்வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 8 ஆம் தேதியன்று கோவை சின்னியம்பாளையத்தில் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வுகள்  நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு வீரத்தியாகிகளின் 75 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி வெள்ளியன்று மாலைதியாகிகள் நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினர். 

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியர் காலனியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

;