tamilnadu

img

உயர்ரக போதைப்பொருள் வைத்திருந்த 3 மாணவர்கள் கைது

 கோவை சூலூரில் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப்  பொருளை வைத்திருந்த 3 கல்லூரி மாணவர்கள் தனிப்படை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.


கோவை மாவட்டம் சூலூர், அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உயர்ரக வெளிநாட்டுப் போதைப் பொருள்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தனிப்படை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 
தகவலின் அடிப்படையில் நீலாம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் தனிப்படை காவல்துறை விசாரணை கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். சந்தேகம் அடைந்த காவல்துறை அவர்களது  உடைமைகளைச் சோதித்தபோது, அதில் சந்தேகத்துக்கிட்டமான வகையில் வெள்ளை நிற பொட்டலம் ஒன்று  இருந்தது
. காவல்துறை இது குறித்து இளைஞர்களிடம் கேட்டபோது பதில் அளிக்காமலிருந்தனர். இதையடுத்து மூவரையும் காவல்துறை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இளைஞர்கள் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த நந்த கிருஷ்ணா மற்றும் வருண் என்பதும், நவ இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த முகமது அரஷத் என்பவருடன் சேர்ந்து வெளிநாடுகளிலிருந்து
மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளைக் கடத்தி வந்து விற்பனை செய்யும் நபர்களிடமிருந்து வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நவ இந்தியா அருகே பதுங்கி இருந்த முகமது அஷ்ரத்தையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 60 கிராம் மெத்தபெட்டமைன்  பறிமுதல் செய்த காவல்துறை, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பிலான   60 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.