பொதுத்தேர்வில் 25 ஆயிரம் பேர்
ஈரோடு, மார்ச் 29- தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், ஈரோட்டில் 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் பத் தாம் வகுப்பு பொதுத்தேர்வு வெள்ளியன்று தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 117 மையங் கள் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. 353 பள்ளிகளிலி ருந்து 24 ஆயிரத்து 854 மாணவ, மாணவிகளும், தினத் தேர்வர்கள் 1066 பேர் என 25 ஆயிரத்து 920 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 70 தணித் தேர்வர்கள் உள்ளிட்ட 838 பேர் முதல் தேர்வு எழுதவில்லை.
மதுரையில் நடைபெறும் சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாட்டை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக கோவை இன்ஜினியரிங் சங்கம் சார்பில் கோவை துடியலூரில் வெள்ளியன்று மாநாட்டு விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, கோவை இன்ஜினியர் சங்க மாவட்ட நிர்வாகிகள், வி.பெரு மாள், சி.துரைசாமி, ஆர்.கேசவமணி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.