விஷவாயு தாக்கி 2 பேர் பலி:
திருப்பூர், மே 19- சாய ஆலை கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடு படுத்தப்பட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், கரைப்புதூர் ஆலையா டையிங் பேக்டரி நிறுவனத்தில் சாயக்கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய, பனியன் தொழிலாளர்களை எந்தவிதமான பாது காப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் தொட்டிக்குள் இறங்கியவர்கள் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவம னையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சரவணன், வேணுகோபால் என்ற இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்துணவு ஊழியர் சங்க அமைப்பு தின விழா
தருமபுரி, மே 19- சத்துணவு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தின விழா தரும புரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40 ஆவது அமைப்பு தின விழா திங்களன்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அதன்படி, தரும புரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ் விற்கு, சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ராமன் சங்கத் தின் கொடியை ஏற்றி வைத்தார். இதில், மாவட்டப் பொரு ளாளர் பி.வளர்மதி, ஒன்றியச் செயலாளர் பி.ஜான்சி ராணி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புக ழேந்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் சி.காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, மாவட்டம் முழுவம் நடை பெற்ற அமைப்பு தின விழாவில், சங்கத்தின் மாவட்டத் தலை வர் தேவகி, மாவட்டச் செயலாளர் பெ.மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய காவலர் குடியிருப்பு கட்ட அடிக்கல்
பொள்ளாச்சி, மே 19- பொள்ளாச்சியில் புதிய காவலர் குடியிருப்பு கட்டுவ தற்கு, முதல்வர் ஸ்டாலின் திங்களன்று அடிக்கல் நாட்டி னார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ.76.15 கோடி மதிப்பீட்டில் புதிய காவலர் குடியிருப்பு கட்டுவதற்கான அடிக் கல் நாட்டு விழா திங்களன்று நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார். இந்த குடியிருப்பில் தலா ஆயிரம் சதுர அடியில் 8 ஆய்வாளர்களுக்கான வீடுகள், 850 சதுர அடியில் 20 உதவி ஆய்வாளர்களுக்கும், தலா 750 சதுர அடியில் 194 காவ லர், தலைமை காவலர்களுக்காக வீடுகள் 3.39 ஏக்கர் ஏக்கரில் கட்டப்பட உள்ளதென, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ் வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்தி கேயன், பொள்ளாச்சி சரக காவல் துறை கண்காணிப்பாளர் சிரிஷ்டி சிங், காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலையைப் புதுப்பிக்கக்கோரி சிபிஎம் மனு
ஈரோடு, மே 19- ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள சாலையைப் புதுப்பிக்கக்கோரி, மாநகராட்சி அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். ஈரோடு மாநகராட்சி, 23 ஆவது வார்டுக்குட்பட்ட திரு மலை முதல் வீதியின் நுழைவாயிலில் சாக்கடை பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் குழாய் அமைக்க இப்பாலம் உடைக்கப்பட்டது. அதன் பிறகு பாலம் பழுது பார்க்கப்படவில்லை. இதனால் அவ்வழியே செல்லும் பள்ளிக் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்ற னர். அதேபோல், வார்டு முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. ஏற்கனவே இருந்தது போல கான்க்ரீட் சாலை அமைத்துத்தர வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சி.கே.முருகேசன் மாநக ராட்சி (பொ) ஆணையரிடம் திங்களன்று மனு அளித்தார். இதில், நகரச் செயலாளர் வி.பாண்டியன், நகரக்குழு உறுப்பி னர் என்.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அநியாய வட்டி கேட்டு மிரட்டல் நிதி நிறுவன உரிமையாளர் மீது புகார்
ஈரோடு, மே 19- அடமான கடனுக்கு 200 விழுக்காடு வட்டி கேட்டு மிரட்டும் நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியைச் சேர்ந்த தேவிகுமாரி என்பவரின் கணவர் கார்த்தி, ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்த நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பியடைக்க, அப்பகுதியிலுள்ள ஜெய்மேக்ஸ் ராஜா என்பவரது பைனான்சை அணுகியுள்ளார். அவர் டிவிஎஸ் வண்டி, மகேந்திரா வங்கி காசோலைகள் 2, ஆதார் கார்டு வாங்கிக் கொண்டு ரூ.25 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். அப்போது இரண்டு வெள்ளைத் தாளில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு வட்டியாக ரூ.3500ஐயும் பெற்றுக் கொண்டார். அத்துடன் மாதம் ரூ.3500 கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு 5 மாதங்கள் ரூ.17 ஆயிரத்து 500 செலுத்தப்பட்டது. கடந்த 13 ஆம் தேதி மீதி பணத்தைக் கொடுத்து வண்டி மற்றும் ஆவணங்களை மீட்க சென்றனர். ஆனால், அவர் வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டும் தான் செலுத்தப்பட்டுள்ளது. அசல் ரூ.25 ஆயிரம் மற்றும் வட்டி ரூ.3 ஆயிரத்து 500 சேர்த்து 28 ஆயிரத்து 500 கொடுத்தால் தான் வண்டி மற்றும் ஆவணங்களை திருப்பிக் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும், மே 16 ஆம் தேதி வீட்டிற்கே சென்று பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். எனவே, நியாய வட்டி கேட்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா மற்றும் பிரபு மீது நடவடிக்கை எடுத்து ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும். தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், என வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு அளித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பா.லலிதா, பி.ராஜா மற்றும் தாலுகாச் செயலாளர் என்.பாலசுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க அமைப்பு தின விழா
தருமபுரி, மே 19- வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் அமைப்பு தின விழா திங்களன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியா ளர் சங்கத்தின் 59 ஆவது அமைப்பு தின விழா, தருமபுரி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலக வளாகத்தில் திங்களன்று கொண்டாடப்பட்டது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.ஜெயவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.கே.ரேகா கோரிக்கைகளை விளக் கிப் பேசினார். ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, வேளாண்மைத்துறை துணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அசோகன், பிரகதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அமைப்பு தினத்தை முன்னிட்டு இனிப்புகளை வழங்கப்பட் டது.