tamilnadu

img

ஆனைகட்டியில் யானை தாக்கி 2 பேர் பலி

கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் இன்று அதிகாலையில்  காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் 2 பேர் பலி
         இன்று அதிகாலை 2 மணி அளவில் மாங்கரை கிராமத்திற்குள் நுழைந்த யானையை விரட்ட முற்பட்ட போது 28 வயதான மகேஷ் குமார் என்பவரை இருட்டில் மறைந்திருந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். அதன்பிறகு காலை 5 மணி அளவில் ஆனைகட்டி துவைப்பதி கிராமத்தை சேர்ந்த 67 வயதான மருதாச்சலம் என்பவரை காட்டு யானை தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.    
  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
 

;