tamilnadu

img

சிங்கப்பூர் ஒபன் இறகுப்பந்து போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஒபன் இறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


சிங்கப்பூர் ஓபன் இறகுபந்து போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேசிய வீராங்கனை யுலியா யோசேபின் சுசண்டோவை 21-16 மற்றும் 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி கொண்டு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேலும், இதற்கு முன்பு நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்தோனேசிய வீராங்கனை யன்னி அலேசாந்தரா மைனாகி என்பவரை 21-9 மற்றும் 21-7 என்று எளிதாக வெற்றி கொண்டார். இதனால் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


மேலும், இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க் வீராங்கனை மியா பிலிஜ்ஃபெல்ட்டை சந்திக்கவுள்ளார்.

;