மலேசியா நாட்டின் பினாங்கு மாநிலத்தில அக். 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் பத்துக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கோவை சின்னவேடம்பட்டியில் இருந்து பயிற்சியாளர் என்.பிரகாஷ்ராஜ் தலைமையில் சென்ற அணியில் இடம்பெற்றிருந்த மௌனிகா, சுபாஷினி, பாலமுரளிகிருஷ்ணா, அபிஷேக், தரனேஷ் ஆகிய வீரர்கள் 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.