ஈரோடு, ஜூன் 14- ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட அவல்பூந் துறை பகுதியில் முதலமைச்சர் திறந்து வைத்த பொழுது போக்கு பூங்கா இரண் டாண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் புதர் மண்டி பயனன்றி கிடப்ப தாக பொதுமக்கள் வேதனை தெரிவித் துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மொடக் குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவல்பூந்துறை பகுதியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக் காக ரூ.142 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் படகுத் துறையுடன் கூடிய பொழுது போக்கு பூங்கா அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி யர் தலைமையில் அடிக்கல் நாட்டப் பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட் டது. இப்பணிகள் நிறைவடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் னர் 16.3.2017 அன்று நடந்த விழாவில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப் பட்டது. இதற்கு பிறகு ஒருவாரம் மட் டுமே பொழுதுபோக்கு பூங்கா பொது மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டது அதற்குப் பிறகு தற்போது இரண்டு ஆண்டுகளாக பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படா மல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முழுவதும் துருயேறி பாழடைந்துள்ளது. இதனோடு பட குத் துறைக்காக அமைக்கப்பட்ட ஏரியும், தூர்வாரப்படாமல் புதர் மண்டிய பாதாளக்கிணறு போலவே காட்சியளிக்கிறது. இதனைக் கண்டு அச்சம் அடைந்து, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார்கள். மேலும், 142 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் வரிப்பணம் விணாகி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பொழுது போக்கு வகையில் ஏதும் வசதி இல் லாத நிலையில் இத்தகைய படகுத் துறை பூங்கா அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் உரிய அதிகாரிகளை நியமித்து படகு துறை பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செயல் படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா!