பொள்ளாச்சி, அக்.18- பொள்ளாச்சியை அடுத்த சரளபதி மலைக்கிராமத்தில் தனியார் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த அகழியில் தவறி விழுந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை ஒட் டியுள்ள சரளபதி மலை கிராமத்தில தனி யார் தோட்டத்தின் அருகே இருந்த அகழி யில் சிக்கி 30 வயது காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித் தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த அந்த காட்டு யானையை உடல் கூறு ஆய்வு செய்தனர். முன்னதாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஒரே ஆண்டில் ஒரு பெண் யானை உட்பட நான்கு யானைகள் உயிரி ழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.