tamilnadu

தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

 தருமபுரி, ஆக.23- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆய்வு கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலை மையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் கட்டு மானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 17 நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உள் பட பல்வேறு அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களான கல்வி,  திருமணம், மகப்பேறு,  கண்கண்ணாடி,  ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவிகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நலத்திட்டங்கள் தொழிலாளர்களுக்கு சென்ற டைவதை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு செயல்பட்டு வரு கிறது. இக்குழுவின் ஆகஸ்ட் மாதக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் 15 பேருக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை மற்றும் விபத்தில் மரணமடைந்த7 பேரின் குடும்பத்திற்கு மரண  உதவித் தொகை ரூ.7.14 லட்சம் உதவிகள் aவழங்கப் பட்டன.  கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் வெளி மாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு தமிழ்நாடு கட்டு மான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து அடை யாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  மேலும் திருமணம், இயற்கை மரணம், விபத்தில் மரணம்,  ஓய்வூதியம் தொடர்பான மனுக்களுக்கு விரைந்து  உதவித்தொகைகள் தொழிலாளர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி அறிவுரைகள் வழங் கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் காளிதாசன்,  தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா, வணிகர் சங்க பிரதிநிதிகள் வைத்தியலிங்கம், கிரிதர்,  தங்கவேல், தொழிற்சங்க பிரதிநிதிகள் சக்திவேல், மூர்த்தி, ஆறுமுகம், சுதர்சனன், வெங்கடாசலம், கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.